--> -->

வைரஸ் தொற்றிலிருந்து 403 கடற்படை வீரர்கள் குணமடைவு

ஜூன் 01, 2020

கொரோனவைரஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 403ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய கடற்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 04 கடற்படை வீரர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 348 கடற்படை வீரர்கள் வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.