--> -->

முப்படையினரின் தனிமைப்படுத்தல் மையங்களில் 12,090 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி

ஜூன் 07, 2020

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் இருவர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.இதற்கமைய இதுவரை 12,090 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த மேலும் 117 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இன்று (ஜூன், 07) வெளியேறியுள்ளனர்.

நாடு முழுவதும் படையினரால் நிர்வகிக்கப்படும் 43 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,135 பேர் தற்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.