--> -->

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

ஜூன் 10, 2020

இரத்மலானை சொய்சாபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் நேற்று மாலை (ஜூன் 9) பிலியந்தலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.  

குறித்த சந்தேக நபார் பிலியந்தலை பகுதியல் வசிக்கும் 50 வயதுடையவர் என  மேல்மாகாண புலனாய்வுத்துறை பிரிவு தெரிவிக்கிறது.   

கல்கிசை பொலிஸார் சந்தேகநபர் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.