--> -->

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 165 பேர் இன்று வீடு திரும்பினர்

ஜூன் 13, 2020

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 165 பேர் இன்று (ஜூன் 13) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இவர்களில் 149 பேர் ராஜகிரிய தனிமைப்படுத்தல் நிலையத்திலும், 16 பேர் பூசா தனிமைப்படுத்தல் நிலையத்திலும் 14 நாட்கள் தங்களது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  சுமார் 13,197 பேர் இன்றுவரை தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் 4,765 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.