--> -->

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 222 பேர் இன்று வீடு திரும்பினர்

ஜூன் 15, 2020

முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்று வார காலம் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 222  பேர் இன்று (ஜூன், 15) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

பூனானை, அம்பாறை, பெல்வேஹர, “ஹோட்டல் ஷெல்டன்” மற்றும்  59 வது பிரிவின் இராணுவ பயிற்சி கல்லூரி ஆகிய இடங்களில் தமது களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்தவர்களே இவ்வாறு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், இமுப்படையினரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  சுமார் 13,875 பேர் இன்றுவரை தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் 4,387 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.