--> -->

மெல்போர்னிலிருந்து 98 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூன் 19, 2020

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 98 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 605 விமானத்தின் மூலம் மெல்பேர்ன் நகரில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.

நாடு திரும்பிய இவர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் உள்ள விமானப்படை வீரர்களினால் தொற்று நீக்கல் செயல்முறைக் உட்படுத்தப்பட்டதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.