--> -->

துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது

ஜூன் 24, 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுந்தூர துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாவி பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த சந்தேக நபர் தம்வசம் வைத்திருந்த துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

மல்லாவி, அய்யன்குளம் பகுதியில் வசிக்கும் 58 வயதுடைய குறித்த சந்தேக நபர் சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றத்தில் இன்று  (ஜூன் 24) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.   

குறித்த சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.