--> -->

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 18,553 பேர் தனிமைப்படுத்தலின் பின் வெளியேறினர்

ஜூலை 05, 2020

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட 18 ஆயிரத்து 553 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொரோணா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   

இதேவேளை தற்போது முப்படையினர் நிர்வகிக்கப்படும் 50 தனிமைப்படுத்தல் மையங்களில் 6308 பேர் தனிமைப்படு த்தலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.