--> -->

ஜோர்டானில் இருந்து மற்றுமொரு இலங்கையர் குழுவினர் தாயகம் வருகை

ஜூலை 06, 2020
ஜோர்டானில் இருந்து சுமார் 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL 1710 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
 
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள், பிசிஆர் பரிசோதனையின் பின்னர் படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.