--> -->

மொஸ்கோ மற்றும் துபாய் நாடுகளில் இருந்த இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

ஜூலை 10, 2020

ரஷ்யா மற்றும் துபாய் நாடுகளிலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 226 மற்றும் UL 1206 விமானங்கள் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதாரண தெரிவித்தார். இதற்கமைய, துபாய் நாட்டிலிருந்து 296 பேரும் பெலாரஸ் நாட்டிலிருந்து 234 பேரும் வருகை தந்ததாக அவர் தெரிவித்தார். 

விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவரும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.