--> -->

இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு

ஜூலை 15, 2020
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.
 
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கெப்டன் அஷோக் ராவோவின் பதவிக் காலத்தில் அவரினால் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினருக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்தார்.
 
மேலும் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கிய பாதுகாப்புச் செயலாளர், அவரின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.