--> -->

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது 2,057 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது

ஜூலை 26, 2020

பொலிசாரினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2, 057 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நான்கு ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகள் வைத்திருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், சட்ட விரோத போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய 473 பேரும், 4115 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் தொடர்புடைய 307 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 276  பேரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 641 பேரும் இந்த தேடுதல் நடவடிக்கையின்போது அந்தந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது 47 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள், 42கிராம் ஐஸ் ரக போதை பொருள் மற்றும் 159 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.