--> -->

களுத்துறை பகுதி சுற்றிவளைப்பின் போது பொலிஸார் எதனோல் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

ஜூலை 30, 2020

தெற்கு களுத்துறை மகாஹீனிடிங்கள பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 4,000 லீட்டர் எதனோல் ரக சட்டவிரோத போதைபொருட்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (ஜூலை 29) கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பத்து சந்தேக நபர்களுடன்  2218 லீட்டர்  எதனோல், அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும்  இயந்திரங்கள் மூன்று,  15,150 வெற்று போத்தல்கள்,  40,000 மூடிகள், நான்கு இரசாயன போத்தல்கள், வெற்று கொள்கலன்கள் மற்றும் மதுபானம் அளக்கும் கருவி போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன.     

குறித்த சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிகவிசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.