--> -->

டோஹா, கட்டாரிலிருந்து மேலும் சில இலங்கையர்கள் தாய்நாட்டிற்கு வருகை

ஆகஸ்ட் 04, 2020

டோஹா, கட்டாரிலிருந்து மேலும் 13 இலங்கையர்கள் நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.இவர்கள் கட்டார் நாட்டின் விமான சேவைக்கு சொந்தமான QR 668 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபதிரண தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவரும் முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட
பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.