--> -->

தொல்பொருட்களை திருட மேற்கொண்ட முயற்சி பொலிசாரினால் முறியடிப்பு

ஆகஸ்ட் 12, 2020

ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் தொல் பொருட்களை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். ஹாலி-எல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஐவரும் தெமோதர மற்றும் பத்தேகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 தொடக்கம் 53 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சந்தேக நபர்களையும் அகழ்வு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பதுல்லை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலி-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.