--> -->

சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது

ஆகஸ்ட் 13, 2020

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வலசமுள்ள மடகன்கொட பகுதியில்  மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறுந்தூர துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது,   உள்ளூரில் தயாரிக்கப்பட்ட  இரண்டு சிறு துப்பாக்கிகள்,  7.62 x 39 மில்லிமீட்டர் கொண்ட ஆறு துப்பாக்கி ரவைகள், 9 x 19 மில்லிமீட்டர் கொண்ட இரண்டு துப்பாக்கி ரவைகள், மூன்று எஸ் ஜீ துப்பாக்கி ரவைகள், மூன்று 7.62 x 39 மில்லிமீட்டர் கொண்ட வெற்றுத்துப்பாக்கி ரவைகள், ஒரு வெல்டிங் பிளான்ட் உட்பட ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சிலவும் இதன் போது கைப்பற்றப்பட்டது.

மடகன்கொட கல்கொலஹேன பகுதியில் வசிக்கும் 61 வயதுடைய சந்தேக நபர் வலச்முள்ள நீதவான் நீதிமன்ற முன்னிலையில் இன்று (13) ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

வலச்முள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.