--> -->

ஹெரோயின் போதைப் பொருளுடன் நால்வர் பொலிசாரினால் கைது

ஆகஸ்ட் 19, 2020

மேல் மாகாணத்தின் தெமட்டகொடை, பாதுக்கை மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் ஹெரோயின் போதைப் பொருளினை தம் வசம் வைத்திருந்ததன் பேரில் பொலிஸாரினால் வெவ்வேறு சந்தர்ப்பங்களின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுக்கை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 1.1 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்கை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அங்கோடையை வசிப்பிடமாக கொண்ட 49 வயதுடைய குறித்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது,  அவர் கொலன்னாவை நகர சபையின் கடமை மேற்பார்வையாளர் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.