--> -->

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி

மார்ச் 11, 2019

இலங்கை கடற்படையினர் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சனிக்கிழமையன்று (மார்ச், 09) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

“ரன் புதா” எனும் மீன்பிடி படகில் இம்மாதம் 05ஆம் திகதி திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீனவரே இவ்வாறு சுகயீனமுற்றிருந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவுல் முனையிலிருந்து சுமார் 73கடல் மைல் தொலைவில் மீன்பிடி நடவடிக்கையிலிருந்த மீனவர் கடுமையாக சுகயீனமுற்றிருந்தவேளையில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகுகின்மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

கரைக்கு கொண்டுவரப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.