--> -->

30 பெர்ச்சஸ் கஞ்சா தோட்டம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் முற்றுகை

ஆகஸ்ட் 22, 2020

ஹம்பாந்தோட்டை பகுதியில் 30 பெர்ச்சஸ் காணிகளில் சட்டவிரோதமான முறையில் பயிரிடப்பட்ட  கஞ்சா தோட்டத்தினை  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நேற்று (21) முற்றிகையிட்டுள்ளனர்.

குறித்த முற்றுகையானது வீரவில விமானப்படையினரின் வான்வழி உளவு நடவடிக்கை உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை விமானப்படையினருடன் இணைந்து போதைபொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட முதன் நடவடிக்கை இதுவாகம்.

இப்முற்றிகையின் போது 39 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.