--> -->

இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 12ஆக உயர்வு

ஆகஸ்ட் 23, 2020

இன்று (23) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் நோயாளி ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 12ஆக உயர்வடைந்துள்ளது.

அண்மையில் இந்தியாவில் இருந்து வந்த 47 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதுடன், அவர் மரணமடைத்ததை தொடர்ந்து நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்த குறித்த பெண் நோயாளி புற்றுநோய் மற்றும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.   

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுகுள்ளனவர்கள் மொத்த எண்ணிக்கை இன்றுடன் 2,947 ஆக பதிபாகியுள்ளதுடன், கொரோனா தொற்றிலிருந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை  2,947 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், தற்போது 137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.