--> -->

இலங்கை எயாலைன்ஸ் தொழிநுட்ப வல்லுநர்கள் சங்கத்தினால் தனிநபார் பாதுகாப்பு உபகரணம் அன்பளிப்பு

ஆகஸ்ட் 25, 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தனிநபார் பாதுகாப்பு உபகரணம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது, இலங்கை எயாலைன்ஸ் விமான தொழிநுட்ப வல்லுநர்கள்  சங்கம் குறித்த உபகரணத்தை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் இன்று (25) அன்பளிப்பு செய்துள்ளது.   

இந்நிகழ்வில் இலங்கை எயாலைன்ஸ் தொழிநுட்ப சங்கத்தின்  தலைவர் அசேல அமரசேகர, இலங்கை எயாலைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக, மனிதவள தலைமை அதிகாரி புத்திக மானகே, வெளிவிவகாரங்களுக்கான முகாமையாளர் உதேனி தர்மதாச உட்பட   இலங்கை எயாலைன்ஸ் தொழிநுட்ப வல்லுநர்கள் சங்கத்தின்  நிறைவேற்று அதிகார உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.