--> -->

கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,842 ஆக உயர்வு

ஆகஸ்ட் 29, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 12 பேர் பூரண குணமடைந்ததையடுத்து வைரஸ் தொற்றிலிருது குணமடைந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2, 842ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய வெலிகந்தை வைத்தியசாலையில் இருந்து 10 பேரும் மினுவாங்கொடை வைத்தியசாலையில் இருந்து இருவரும் சிகிச்சையின் பின் வெளியேறிச் சென்றதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவாகியுள்ள அதேவேளை, கொரோனா காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 132 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.