--> -->

ஹெரோயின் மற்றும் பணத்துடன் இருவர் பொலிஸாரால் கைது

ஆகஸ்ட் 29, 2020

6.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 466,100 ரூபா பணம் வைத்திருந்த இரு பெண்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய கலுபே மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 61 வயதுகளையுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் (29) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மீட்டியா கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.