--> -->

துப்பாக்கிகளுடன் இருவர் பொலிஸாரால் கைது

ஆகஸ்ட் 29, 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 12 மிமீ சுடுகுழல் கொண்ட துப்பாக்கியுடன் யக்கலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவ்விருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தெஹிகஹஹென மற்றும் கல்கந்த பிரதேசங்களைச் சேர்ந்த 32 மற்றும் 45 வயதுகளையுடைய இரண்டு சந்தேகநபர்களும் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.