--> -->

1428 கிலோ உலர்ந்த மஞ்சள் கடத்தல் முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு

ஆகஸ்ட் 30, 2020

கற்பிட்டி பிரதேசத்தில் நேற்று (29) உலர்ந்த மஞ்சளினை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதன்போது 1,428 கிலோ கிராம் மஞ்சள், ஒரு டிங்கி இழைப் படகு மற்றும் இரண்டு வாகனங்கள் என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் கற்பிட்டி துறையடி பிரதேசத்தின் ஊடாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

கற்பிட்டி, கொடியகும்புற பகுதிகளைச் சேர்ந்த 20 வயது தொடக்கம் 44 வயதுகளைக் கொண்ட சந்தேக நபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை மற்றும் வெள்ள தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.