--> -->

815 கிலோ உலர்ந்த மஞ்சள் கடத்தல் முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு

செப்டம்பர் 06, 2020

கற்பிட்டி, எத்தளை பிரதேசத்தில் இன்று (06) 815 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை சட்டவிரோதமாக கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது.

இதன்போது கற்பிட்டி, கொடியகும்புற பகுதிகளைச் சேர்ந்த 20 வயது தொடக்கம் 31 வயதுகளைக் கொண்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.