--> -->

10 கிலோ தங்கத்தை கடத்தும் முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிப்பு

செப்டம்பர் 08, 2020

புத்தளத்தில் 10 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை கடத்த மேற்கொண்ட முயற்சி விசேட அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கார் ஒன்றின் மூலம் கொண்டு செல்லப்படவிருந்த குறித்த தங்கத்தை அதிரடி படையினர் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கம் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பாலாவி - கற்பிட்டி வீதி பலந்துடவ சந்தியில் வைத்து கண்டக்குளியில் வசிக்கும் 34 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்துக்கிடமான காரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மிகவும் சூட்சமமான மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.