--> -->

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டுவர கடற்படை உதவி

ஜூலை 12, 2019

கடுமையாக காயமுற்ற மீனவர் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கடற்படையினர் நேற்று (ஜூலை, 11) கரைக்கு கொண்டுவந்துள்ளனர். குறித்த மீனவர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக காலி மீன்பிடித்துறைமுகத்திலிருந்து “தனுஜா துவ III” எனும் பல நாள் மீன்பிடிப்படகில் இம்மாதம் 05ஆம் திகதி சென்றிருந்தார். அம்மீனவர் தனது படகிலிருந்து மற்றொரு படகிற்கு செல்ல முயன்றபோது கீழே விழுந்து கடுமையாக காயமடைந்தார்.

குறித்த நபர் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் தெற்கு கடற்படை கட்டளயகத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்டு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் ஹம்பாந்தோட்டையிலிருந்து 121கடல் மைல்களுக்கு அப்பால் சென்று அழைத்து வரப்பட்ட மீனவர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் துரதிஷ்டவசமாக கடுமையான காயங்களுக்கு உட்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.