--> -->

வைரஸ் தொற்றுக்குள்ளான 17,559 பேர் குணமடைவு

டிசம்பர் 01, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 503 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 23,986 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் ஆறு பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஏனையோர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 147 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 130 பேரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 41 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20,438 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 14,152  பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 12,031 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 558 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 149 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் அபுதாபியிலிருந்து  69 பேரும் ஜோர்மனியிலிருந்து 05 பேரும் கட்டாரிலிருந்து  95 பேரும் வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்  தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,559 ஆக உயர்வடைந்துள்ளது.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 58 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,309 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக  அதிகரித்துள்ளது.