--> -->

ரஷ்ய தூதுவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

டிசம்பர் 05, 2022

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவான் தகர்யான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இந்த சந்திப்பு (டிசம்பர் 05) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த ரஷ்ய தூதுவரை இராஜாங்க அமைச்சர் வரவேற்று கலந்துரையாடினார்.

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ இராஜதந்திரத்தை மேம்படுத்துவது குறித்தும் இந்த சுமுகமான கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, இன்றைய தினம் அமைச்சில் நடைபெற்ற இந்ந சந்திப்பினை நினைவுகூரும் வகையில் ரஷ்ய தூதருக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

ரஷ்ய தூதுகர பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அலெக்ஸி பொண்டரேவ், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ இணைப்பு அதிகாரி கேணல் துசிஸ்த பண்டார மற்றும் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானராச்சி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.