--> -->

2,467 கிலோ பீடி இலைகளுடன் சந்தேகநபர்கள் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 18, 2023

தொடுவாவ மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடலோரக் காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2,467 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் 76 பொலித்தீன் பைகளில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவர பொதியிடப்பட்டிருந்ததாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

கடலோரக் காவல்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்டையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கலால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடலோரக் காவல்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.