--> -->

விமானப்படை பணியாளர்களுடனான சந்திப்பில் அரசாங்க பிரதிநிதிகள் பங்கேற்பு

மார்ச் 13, 2023

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெஹான் சேமசிங்க ஆகியோர் நேற்று (09 மார்ச் 2023) இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இவ் விஜயத்தின் போது, விமானப்படையின் தேவைகள் மற்றும் நுண்ணறிவுகளை சேகரிக்கும் நோக்கத்துடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் முழு விமானப்படை நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய விமானப்படை பணியாளர்களுடன் அரச பிரதிநிதிகள் பயனுள்ள உரையாடலில் ஈடுபட்டனர்.

விமானப்படை பணியாளர்களின் நிர்வாகம் மற்றும் நலனை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பது குறித்தும், தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் விமானப்படையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வது குறித்தும் இதன்போது  கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் அரச பிரதிநிதிகள் விமானப்படை வீரர்களுடன் நேரடியான தொடர்புகளில்  ஈடுபடுவதற்கும், எதிர்காலத்தில் இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும்  ஆழமான புரிந்துணர்வை பெறுவதற்கும் இந்த விஜயம் வாய்ப்பளித்தது.

அதேபோன்று விமானப்படை பணியாளர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய தூதுக்குழு, தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் முப்படைகளுக்கு  அரசாங்கத்தின் பூரண ஆதரவு வழங்கப்படும் எணவும் இதன்போது உறுதியளித்தனர்.