--> -->

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினருக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்ச் 24, 2023

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இராணுவத்தினருக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் (மார்ச் 19) இடம்பெற்றது.
 
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற அமர்வின் போது ‘போதைக்கு அடிமையாதல் மற்றும் இத்தகைய பழக்கவழக்கச் செயல்களிலிருந்து தடுத்தல்’ என்ற தலைப்பில் விரிவுரை  நடபெற்றது என இராணுவ தகவல் தெரிவித்தது.

யாழ்ப்பாணம் பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போத்தோட்டாவின் வழிகாட்டுதலின் கீழ்  நடபெற்ற இந்நிகழ்வில் 27 இராணுவ அதிகாரிகளும் 300 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்களும் கலந்து கொண்டதுடன்,  பொலிஸ் அதிகாரிகளினால் விரிவுரை நடத்தப்பட்டது.

55 ஆவது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 29 அதிகாரிகள் மற்றும் 410 இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் மற்றுமொரு விரிவுரை ஒன்று (20 மார்ச்) திகதி நடைபெற்றது என இராணுவ தகவல்கள் மேலும் தெரிவித்தன.