--> -->

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இலங்கை பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

மார்ச் 28, 2023
  • பாதுகாப்பு உறவுகளை மேலும் வளர்க்க ஆஸ்திரேலியாவும் இலங்கையும் இணக்கம்

 இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 28) கொழும்பு 07, வித்யா மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார்.

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் அவர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிக்கு வருகை தந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு உயர் அதிகாரிகளும் சுமுகமாக கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கு நினைவு சின்னம் வழங்கினார்.

பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானராச்சி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.