--> -->

நமிபிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரியாவிடை சந்திப்பு

ஏப்ரல் 20, 2023

புதுடெல்லியை தளமாகக் கொண்ட நமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் டைட்டஸ் சைமன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகர் மரியாதை நிமித்தமாக குறித்த சந்திப்பை மேற்கொண்டார்.

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இந்த சந்திப்பு இன்று (ஏப்ரல் 20) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பிரிகேடியர் ஜெனரல் சைமனை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது நமிபிய பாதுகாப்பு ஆலோசகர் தனது பதவிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சினால் தனக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்காக பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக பிரியாவிடை பெற்றுச்செல்லும் பாதுகாப்பு ஆலோசகர் அவர்களினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காக பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்தார்.

மேலும், இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.