--> -->

பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூலை 06, 2023

கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் முஹம்மட் சப்தர் கான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூலை 06) இடம்பெற்றது.

பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கான் அவரது மூன்று வருட பதவிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளுடன் பேணிய சிறந்த உறவுகள், இராணுவ இராஜதந்திர மற்றும் நல்லெண்ண செயற்பாடுகளை ஜெனரல் குணரத்ன இதன்போது பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் இக்கட்டான காலங்களில் வழங்கப்பட்ட ஆதரவுகள் குறித்தும் இதன்போது ஜெனரல் குணரத்ன நினைவுகூர்ந்தார்.

இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக கேர்ணல் கான் பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும் நாடு திரும்பவுள்ள பாகிஸ்தானிய பாதுகாப்பு ஆலோசகரின் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதரவும் கலந்து கொண்டார்.