--> -->

ஆசிய பாரா விளையாட்டு வீரர்களுக்கு
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பு

ஒக்டோபர் 13, 2023

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிய பரா விளையாட்டு வீரர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஒக்.13) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு விஜயம் செய்த விளையாட்டு வீரர்களுடன் இராஜாங்க அமைச்சர் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன், பின்னர் இந்த விளையாட்டு வீரர்களின் தேவைகளையும் இதன்போது கேட்டரிந்தார்.

மேலும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் இராஜாங்க அமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், இந்த விளையாட்டுப் போட்டியில் தங்களின் முழுத் திறமைகளையும் சிறந்த முறையில் வெளிப்படுத்தி தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.