--> -->

மருத்துவ முகாமில் அமைச்சக ஊழியர்கள் இரத்ததானம் செய்தனர்

ஒக்டோபர் 19, 2023

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மருத்துவ முகாமின் இரண்டாம் கட்டம் இன்று (ஒக்.19) அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.

அதன்போது இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் அமைச்சின் சேவையாற்றும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்கள் பலர் இரத்ததானம் செய்தனர்.

இந்த மருத்துவ முகாமின் முதற்கட்டமாக அமைச்சின் ஊழியர்களுக்கு அவர்களின் நோய்களுக்கான அடிப்படை மருத்துவப் பரிசோதனை அண்மையில் (ஒக்.5) இடம்பெற்றது.

முறையான நோயறிதலுக்குப் பின்னரான உரிய மருத்துவ சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட குறித்த மருத்துவ முகாமில் அமைச்சின் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் மருத்துவப் பணியாளர்கள் குழுவினால் இந்நிகழ்வுக்கான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.