--> -->

புதுக்குடியிருப்பு விவசாயிகளுக்கு இலங்கை இராணுவம் உதவி

ஒக்டோபர் 26, 2023

இலங்கை இராணுவத்தின் 68வது காலாட்படை பிரிவினரால் அண்மையில் புதுக்குடியிருப்பு மற்றும் சுதந்திபுரம் பகுதிகளில் உள்ள விவசாயிகளினால் கைவிடப்பட்ட நெல் வயல்களை பயிர்செய்கைகாக உழுது தயார்செய்து கொடுத்துள்ளனர்.

68வது காலாட்படைப்பிரிவின் 3வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 9வது தேசிய பாதுகாவலர் படையினரின் உதவியுடன் விவசாயிகளின் வயல்களை உழவுதல், மற்றும் நெல் விதைகளை பெற்றுக் கொள்வதற்கான நிதியுதவியும் வழங்கியுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 68வது காலாட்படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.