--> -->

இலங்கை பாரா விளையாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர்

நவம்பர் 01, 2023

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 4வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் பல பதக்கங்களை வென்ற இலங்கை பாரா தடகள அணி திங்கள்கிழமை (அக். 30) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பியது.

இலங்கை இராணுவப் பொலிஸ் பிரிவின் வாரண்ட் அதிகாரி II கே எ சமித்த துலான். ஈட்டி எறிதலில் (F-44) வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில்(F-63), இலங்கை தேசிய பாதுகாப்புப் படையின் (SLNG) சார்ஜென்ட் எச்.ஜி. பாலித பண்டார வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார் என இராணுவ ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ. ரோஹன திஸாநாயக்க பா. உ. மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் விமான நிலையத்தில் பரா தடகள வீரர்களை வரவேற்க பிரசன்னமாகியிருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை கடற்படையின் கடற்படை வீரர் எஸ்.எம்.ஏ.எஸ்.எம்.சுபசிங்கவும் அன்றைய தினம் தாயகம் வந்தடைந்ததாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.