--> -->

பொலன்னறுவை நோயாளர்களுக்காக இராணுவப் படையினர் இரத்த தானம்

நவம்பர் 04, 2023

பொலன்னறுவை வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் ஒத்துழைப்புடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவப் படையினர் அண்மையில் நடைபெற்ற இரத்த தானம் நிகழ்வின் போது இரத்த தானம் செய்தனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யு.பி குணரத்ன உட்பட மற்றும் பெருமளவிலான துருப்புக்கள் இந்நிகழ்வில் இணைந்து கொண்டதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.