--> -->

இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

டிசம்பர் 05, 2023

இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி செவரீன் ஷப்பாஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 05) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சரும் திருமதி ஷப்பாசும் சுமுகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது இலங்கையில் செஞ்சிலுவை சங்கத்தின் சேவையை பாராட்டிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், அவசரகால சூழ்நிலைகளின் போது அதன் பங்கு பாராட்டத்தக்கது என்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.

அத்துடன், செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான நடவடிக்கைகளின் போது இலங்கை வழங்கிய சிறந்த ஆதரவிற்கு திருமதி சப்பாஸ் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ICRC ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளின்  நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் சன்ன ஜயவர்தனவும் கலந்துகொண்டார்.