--> -->

இந்திய தூதரக புதிய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

டிசம்பர் 20, 2023

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மன்தீப் சிங் நேகி இன்று (டிசம்பர் 20) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வரவேற்பைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் கேர்னல் நேகியுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். மேலும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு கடமையாற்ற நியமனம் பெற்று வந்ததை இட்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இச்சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுப் பரிசுகள் சின்னங்கள் பரிமாறப்பட்டது.

இச்சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.