--> -->

இராணுவத்தினரால் கொழும்புத்துறையைச் சேர்ந்த குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு

ஜனவரி 02, 2024

கொழும்புத்துறையில் வசிக்கும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட ஏழை குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் 17வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் புதிய வீடொன்றை நிர்மாணித்து பயனாளி குடும்பத்திற்கு அண்மையில் கையளித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 772வது வீட்டிற்க்கான நிதியுதவி கனடாவில் வசிக்கும் தொரியப்பா குடும்பத்தினரால் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் 51 ஆவது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, ஏனைய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.