--> -->

சேவைக் காலம் முடிந்து செல்லும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 04, 2024

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 04) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக மைக்கல் அப்பிள்டன் பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

நியூசிலாந்து உயர்ஸ்தானிகரின் சேவையைப் பாராட்டிய ஜெனரல் கமல் குணரத்ன, அவரது பதவிக் காலத்தில் இலங்கைக்கு நியூசிலாந்து வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.