--> -->

இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) ‘கப்ரா’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜனவரி 09, 2024

இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) ‘கப்ரா’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கள்கிழமை (ஜனவரி 8) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'கப்ரா' 50 மீட்டர் நீளமுள்ள கடல் ரோந்துக் கப்பலில் 55 கடற்படை வீரர்களைக் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், பல சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்கும் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்கவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு (ஐஎன்எஸ்) ‘கப்ரா’ புதன்கிழமை (ஜனவரி 10) இலங்கையை விட்டு மீண்டும் புறப்படவுள்ளது.