--> -->

இலங்கை வந்தது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

ஜனவரி 30, 2024

பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) ‘சைஃப்’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜனவரி 30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(பிஎன்எஸ்) ‘சைஃப்’ 123 மீற்றர் நீளமுள்ள போர்க் கப்பலில் 276 கடற்படை வீரர்களைக் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.

நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், பல சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்கும் இலங்கை கடற்படை கப்பலுடன் இணைந்து Passage Exercise (PASSEX) பயிட்சி நடவடிக்கையில் பாகிஸ்தானிய கப்பலின் பணியாளர்கள் பங்கேற்கவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு (பிஎன்எஸ்) ‘சைஃப்’ எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி இலங்கையை விட்டு மீண்டும் புறப்படவுள்ளது.