--> -->

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இலங்கை
தேசிய மாணவர் படையினர் பங்கேற்பு

பெப்ரவரி 03, 2024

இந்திய தேசிய மாணவர் படையணி பணிப்பாளரின் அழைப்பின் பேரில், இந்தியாவின் புதுடெல்லியில் அண்மையில் (ஜன. 26) நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் இலங்கை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை தேசிய மாணவர் படையணியின் ஒரு குழு பங்கேற்றது.

தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா அவர்களின் தலைமையில் ஆண் மற்றும் பெண் மாணவச் சிப்பாய்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற சர்வதேச மாணவர் படையணியின் முகாமில் இருபத்தைந்து நாடுகளைச் சேர்ந்த மாணவச் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது, இலங்கை மாணவச் சிப்பாய்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்த சக சிப்பாய்களுடன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வதற்கும், தங்கள் திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்துவதற்கும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.