--> -->

இந்திய பாதுகாப்பு முகாமைத்துவக் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு
பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

பெப்ரவரி 05, 2024

இந்திய பாதுகாப்பு முகாமைத்துவக் கல்லூரியின் கொமடோர் சுனில் குமார் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி 05) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் முகாமைத்துவக் பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோரிக்கிடையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இருதரப்பு பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தூதுக்குழுவின் தலைவர் ஆகியோர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.