--> -->

ரணவிரு சேவா அதிகாரசபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்பு

பெப்ரவரி 05, 2024

ரணவிரு சேவா அதிகாரசபையின் 10வது தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே (ஓய்வு) 2024 பெப்ரவரி 2ஆம் திகதி கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அதிகாரசபையின் ஊழியர்கள் மத்தியில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது  உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு), உப தலைவரும், செனஹாச விசேட கல்வி மற்றும் வள நிலையத்தின் பிரதம மேற்பார்வை அதிகாரியுமான திருமதி சோனியா கோட்டேகொட மற்றும் பல சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்.

Tamil